பெற்றோர் நித்திரை : சிறிய தந்தை 7 வயது மகள் மீது வல்லுறவு!!

637

abuse

7 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவில் வய்கால – தம்பரவில பகுதியைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியின் சிறிய தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் நித்திரையில் இருந்தபோது சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.