ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

1029

ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

St Petersburg, Sennaya Ploshchad மற்றும் அதன் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் சம்பவமா..? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார்.