விளையாட்டாக தூக்கு மாட்டிய சிறுவன் பரிதாப மரணம்!!

483

boy

அமெரிக்காவில் விளையாட்டாக தூக்கு மாட்டிய சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.

அமெரிக்காவின், லூயிஸ்வெலி நகரை சேர்ந்தவன் ஜோர்டன் மோர்லன்(16). அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பேய் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக,தன்னை விகாரமாக ஒப்பனை செய்துகொண்ட, ஜோர்டன் விளையாட்டிற்காக வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தன் தங்கையை அச்சுறுத்த நினைத்தான்.



சற்று நேரத்தில் மயக்கம் அடைந்த அவன் அசைவின்றி தொங்கியதைக் கண்டு ஜோர்டனின் தங்கை அதிர்ச்சி அடைந்தாள்.
உடனடியாக தாயிடம் ஓடிச்சென்று நடந்ததை கூறினாள். பதறி ஓடி வந்த ஜோர்டனின் தாய் அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்.

கழுத்தில் ஏற்பட்ட இறுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஜோர்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோர்டன் உயிரிழந்துள்ளான்.