மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!!

869

அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ யாய – 5 பிரசேதத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் 32 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 34 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பெண் முதலில் கலேன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.