வவுனியாவில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி!!

950

 
வவுனியா பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் நோக்கில் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று (04.04.2017) காலை 9.30 மணியளவில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008.06.30ம் திகதி இரானுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு இரு சகோதரர்கள் இவரின் ஒரு சகோதரர் முன்னால் விடுதலைப்புலி உறுப்பினராவர். இவர் கடந்த யுத்தகாலத்தில் மரணமடைந்துள்ளார். இவரின் மற்றைய சகோதரனும் இறுதி யுத்தத்தில் செல் வீச்சு காரணமாக மரணமடைந்துள்ளார். இவரின் தந்தையும் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வருகின்றார்.

இவரின் வாழ்வதாரத்தினை மேற்படுத்து நோக்குடனே கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகளின் (Truck Drivers) ஒழுங்கமைப்பில் மொன்றியில் துர்க்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபகாரர்களினால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.