வவுனியா மூன்று முறிப்பு தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்கு மாணவிகள் விசேட சித்தி!!

1167

 
வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ராமராஜ் யாழினி என்ற மாணவி 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் ஆப்பாடசாலையை சேர்ந்த விஜியபாஸ்கரன் தனுசியா 6ஏ பி சி எஸ், பாலசுப்பிரமணியம் யதுஸ்யா 6ஏ,2பி, கனகலிங்கம் அனுசியா 5ஏ,4பி, செல்வதாஸ் சனிசியா, 3ஏ,3சி,2எஸ் ஆகிய மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளை பெற்று பாடசாலைக்க பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் இப்பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 25 மாணவர்கள் தோற்றி 15 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் அதிக சித்திகளை பெற்ற மாணவி ராமராஜ் யாழினி கருத்து தெரிவிக்கையில், எனது கல்வி வளர்ச்சிக்கு உறுதுiணாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்பதே எனது இலட்சியம் என தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் க.பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், எமது பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு அதிக சித்திகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டதுடன் பெற்றோர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தியிருந்தேன் எனது முயற்சிக்கு வலயக்கல்வி பனிமனையும் உறுதுணை வழங்கியது கடந்த ஆண்டை விட 2016 இல் அதிக மாணவர்கள் சித்திகளை பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.