வவுனியாவில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்!!

444

 
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நொச்சிக்குளம் இல 01 கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (04.04.2017) மாலை 2 மணியளவில் பாடசாலை அதிபர் கு.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பின் கோடீஸ்வரன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் வி.ஸ்ரீரங்கநாதன், வடக்கு கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாதேவி உமாதேவன், ஆசிரிய ஆலோசகர்கள், கிராமசேவையாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பல கிராமங்களை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டுக்கள், முட்டி உடைத்தல், சறுக்குமரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், கிராமிய நடனம், சிறுவர்களின் பலூன் உடைத்தல். கிளித்தட்டு பெண்கள், ஆண்கள், யானைக்கு கண்வைத்தல், தலையனைச்சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றது.

இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.