வவுனியாவில் பிச்சை எடுக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக பூமாலை விற்கும் மூதாட்டி!!

332

 
கண்டி வீதியில் (A9) மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயிலடியில் பெரியண்ணன் ரத்தினம் என்ற 71 வயதையுடைய மூதாட்டி தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மாலைகள் விற்று முடியுமட்டும் பை நிறைய பூ மாலைகளுடன் அமைதியாய் உட்காந்திருப்பார்.

தினமும் அதிகாலை எழுந்து பூக்களைப் பறித்து ஏழு, எட்டு மாலைகளுடன் 15 ரூபா பணம் கொடுத்து பேருந்தில் ஏறி மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து பிள்ளையாரை வணங்கி விட்டு தான் கொண்டு வந்த மாலைகளுடன் பிள்ளையார் வாயிலில் மாலையுடன் அமர்ந்திருப்பார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்..

ஒரு மாலையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வேன். ஆனால் சிலர் இரண்டு மூன்று மாலைகளை வாங்கி பணத்தினையும் தருவார்கள். எல்லா மாலையையும் விற்றால் மட்டுமே எனக்கு 30 0ரூபா அல்லது 350 ரூபா பணம் கிடைக்கும். சில நேரம் மாலைகள் விற்பனை செய்யபடாமல் இருக்கும் பின் அந்த மாலைகளை நான் பிள்ளையாருக்கு போட்டு விட்டு நடந்தே செல்வேன்.

எனது கணவர் இறந்து விட்டார். நான் எனது மகளுடனே வாழ்ந்து வருகின்றேன். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றோம். நான் உழைத்து கொண்டு வரும் பணத்தினையே வாடகை வீட்டுக்காக சேர்த்து மாதம் 10,000 ரூபா கொடுக்கின்றோம். வீட்டில் இருந்து வரும் போது சமையல் செய்து சாப்பாடுடன் தான் வருவேன். ஆனால் பசிக்காது கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடாமல் திரும்ப வீட்டுக்கே கொண்டு செல்வேன். எனவும் கவலைபட கூறினார்.

இந்த வயதிலும் பிச்சை எடுக்காது உழைத்து வாழ நினைக்கும் இவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.