புற்றுநோய்களை உணவு முறைகளின் மூலம் கட்டுப்படுத்தலாமா?

595

புற்றுநோய்களில் கழுத்து, மூளை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய்களை தெரிவு செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும், வராமல் தற்காத்துக் கொள்ளலாம் என்றும் அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிராக்கோலி மற்றும் சோயா ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவதால் இதனை கட்டுக்குள் வைத்திருக்க இயலும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இவை செரிமானமாகி Di=indolylmethane என்ற பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் புற்றுநோயை பரப்பும் செல்கள் தொடர்ந்து வளர்ச்சியடையாமல் முடக்கப்படுகின்றன.

அதே போல் தினசரி பழங்களையும்,காய்கறிகளையும் குறைந்த பட்சம் 1000 கலோரி அளவிற்கு உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளத்தொடங்கினால் கழுத்து மற்றும் மூளையில் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்கவும், வந்தபின் அதனை கட்டுக்குள் வைக்கவும் இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



அதே போல் எக்காரணம் கொண்டும் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி, வெள்ளாட்டு இறைச்சி ஆகியவற்றை அதிகளவில் சாப்பிடக்கூடாது. அதிகளவில் உப்புச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.