ஆட்டோவில் பயணித்த நபருக்கு பியரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை!!

724

வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வரை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்று அவ­ருக்கு ஒரு­வகை மாத்­திரை கலந்த பியரை அருந்தக் கொடுத்து பாழ­டைந்த இட­மொன்றில் வைத்து அவர் அணிந்­தி­ருந்த சுமார் 1,75,000 ரூபா பெறு­ம­தி­யான தங்கச் சங்­கிலி மற்றும் பணத்தைக் கொள்­ளை­யிட்டுக் கொண்டு தப்பிச் சென்ற முச்­சக்­கர வண்­டியின் சார­தியை முச்­சக்­கர வண்­டி­யுடன் நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த 48 வய­தான முச்­சக்­கர வண்­டியின் சார­தியே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் வென்­னப்­புவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 50 வய­து­டைய நபரே இச்­சம்­ப­வத்­திற்கு முகங்­கொ­டுத்­த­வ­ராவார்.

கைது செய்­யப்­பட்ட முச்­சக்­கர வண்­டியின் சாரதி கொழும்­பி­லி­ருந்து சிலா­பத்­துக்கு வந்­து­விட்டு மீண்டும் கொழும்­புக்குத் திரும்பிக் கொண்­டி­ருந்த போது வென்­னப்­புவ பிர­தே­சத்தில் பஸ்­ஸூக்­காக காத்­தி­ருந்த நபர் ஒரு­வரை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்­றுள்­ள­தா­கவும் பின்னர் வென்­னப்­புவ பஸ் தரிப்­பி­டத்­துக்கு அருகில் வைத்து இரு­வரும் பியர் அருந்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பியர் அருந்­திய பின்னர் மயக்­க­ம­டைந்த நபர் கழுத்தில் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கிலி மற்றும் அவ­ரி­ட­மி­ருந்த பணத்­தையும் கொள்­ளை­யிட்டுக் கொண்­டுள்ள முச்­சக்­கர வண்­டியின் சாரதி மயக்க நிலை­யி­லி­ருந்த நபரை நைனா­மடம் பிர­தே­சத்தில் வீதியில் இறக்கி விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.