17 வயது மாணவனின் வீட்டுக்கு சென்று வல்லுறவுக்குட்படுத்திய 21 வயது காதலி!!

688

17 வயதான மாணவன் ஒருவனை பேஸ்புக் மூலம் காதலித்த பெண் ஒருவர், குறித்த மாணவனை வீடு புகுந்து பாலியல் வல்லுற வுக்குட்படுத்திய சம்பவமொன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்தப் பகுதியில் உள்ள அழகுக் கலை நிலையத்தில் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் வன் படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் கதவைத் தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. கதவைத் திறக்க முற்பட்டால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மாணவனின் பெற்றோர் ராமாபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் கதவைத் தட்டியுள்ளனர். மீண்டும் கதவைத் திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் செய்வதறியாது திகைத்ததுடன் பொலிஸார் திரும்பிச் சென்றுவிட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எஸ்.ஐ. லாலு தலைமையில் பொலிஸார் விரைந்து சென்று, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து பெற்றோரின் முறைப்பாட்டின் பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை பொலிஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. எனினும் பெற்றோரு டன் செல்ல விருப்பமில்லை என மாணவன் கூறியதால் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.