கடவத்தை பிரதேசத்திலுள்ள ஆடையகம் ஒன்றில் இளைஞரொருவர் தனது தாய்க்காக சேலை ஒன்றை வாங்குவதற்காக சென்றிருந்தபோது, கடைகளில் சேலைஅணிவித்து வைக்கப்பட்டிருக்கும் மாதிரி பொம்மைகளின் சேலையை தொட்டுப் பார்த்துக் கொண்டு சென்ற நிலையில் பொம்மையென நினைத்து உண்மையான பெண் ஒருவரின் சேலையை பிடித்து இழுத்து சங்கடத்தக்கு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரொருவர் புத்தாண்டுக்காக தனது தாயுடன் ஆடையகமொன்றுக்கு ஆடை கொள்வனவு செய்வதற்கு சென்றுள்ளார்.
அதன்போது, அவர் தனது தாய்க்கு சேலை தெரிவு செய்வதென முடிவு செய்து அங்கிருந்த ஒவ்வொரு புடவைகளாக எடுத்து காட்டியிருந்த போதிலும் அவரது தாய்க்கு அவைகளில் எவையும் பிடித்திருக்கவில்லை.
இந்நிலையில், அந்த ஆடையகத்திலிருந்த மாதிரி பெண் பொம்மைகள் அணிந்திருந்த சேலையின் முந்தானையை எடுத்து தனது தாயின் தோளில் போட்டு இளைஞர் பொருத்தம் பார்த்துள்ளார்.
அவ்வாறாக அங்கிருந்த இரண்டு பொம்மைகளின் சேலைகளை பொருந்தி பார்த்த போதிலும் தாய் திருப்தி அடைந்திருக்காமையினால் மூன்றாவதாக நின்றிருந்த பெண்ணின் சேலையை இழுத்துள்ளார். அதன்போதே அது பொம்மையல்ல உண்மையான பெண் என தெரியவந்ததையடுத்து அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும், பொதுவான இடமொன் றில் வைத்து தன்னை அசௌகரியத்துக்குள்ளாக்கிய மையினால் அப்பெண் குறித்த இளைஞனை கடுமையாக திட்டியிருந்த நிலையில் அவமானத் துக்குள்ளான தாயும் மகனும் அங்கிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது.






