பொம்­மையின் சேலை என நினைத்து பெண்ணின் சேலையை தொட்டுப் பார்த்­த இளைஞன்!!

986

கட­வத்தை பிர­தே­சத்­தி­லுள்ள ஆடை­யகம் ஒன்றில் இளைஞரொருவர் தனது தாய்க்­காக சேலை ஒன்றை வாங்­கு­வ­தற்­காக சென்­றி­ருந்­த­போது, கடை­களில் சேலை­அ­ணி­வித்து வைக்கப்­பட்­டி­ருக்கும் மாதிரி பொம்­மை­களின் சேலையை தொட்டுப் பார்த்துக் கொண்டு சென்ற நிலையில் பொம்­மை­யென நினைத்து உண்­மை­யான பெண் ஒரு­வரின் சேலையை பிடித்து இழுத்து சங்கடத்தக்கு சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­பவம் பற்றி மேலும் தெரிய வரு­வ­தா­வது, கட­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் புத்­தாண்­டுக்­காக தனது தாயுடன் ஆடை­ய­க­மொன்­றுக்கு ஆடை கொள்­வ­னவு செய்­வ­தற்கு சென்­றுள்ளார்.

அதன்­போது, அவர் தனது தாய்க்கு சேலை தெரிவு செய்­வ­தென முடிவு செய்து அங்­கி­ருந்த ஒவ்­வொரு புட­வை­க­ளாக எடுத்து காட்­டி­யி­ருந்த போதிலும் அவ­ரது தாய்க்கு அவை­களில் எவையும் பிடித்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில், அந்த ஆடை­ய­கத்­தி­லி­ருந்த மாதிரி பெண் பொம்­மைகள் அணிந்­தி­ருந்த சேலையின் முந்­தா­னையை எடுத்து தனது தாயின் தோளில் போட்டு இளைஞர் பொருத்தம் பார்த்­துள்ளார்.

அவ்­வா­றாக அங்­கி­ருந்த இரண்டு பொம்­மை­களின் சேலைகளை பொருந்தி பார்த்த போதிலும் தாய் திருப்தி அடைந்­தி­ருக்­கா­மை­யினால் மூன்­றா­வ­தாக நின்­றி­ருந்த பெண்ணின் சேலையை இழுத்­துள்ளார். அதன்­போதே அது பொம்­மை­யல்ல உண்­மை­யான பெண் என தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து அவ­ரிடம் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

எனினும், பொது­வான இட­மொன் றில் வைத்து தன்னை அசௌ­க­ரி­யத்­துக்­குள்ளாக்கிய மையினால் அப்பெண் குறித்த இளைஞனை கடுமையாக திட்டியிருந்த நிலையில் அவமானத் துக்குள்ளான தாயும் மகனும் அங்கிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது.