07 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!!

629

2009ம் ஆண்டு பிட்டிகல பிரதேசத்தில் நபர் ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.