ஒரிஸாவின் மதக்கலவரம் : ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு!!

570

ஒரிஸா – பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் – சீதை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆட்சேபனை கருத்துக்கள் வௌியிடப்பட்டமையை அடுத்தே இந்த மதக்கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலவரத்தை அடுத்து பத்கர் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மதக்கலவரத்தினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மதக்கலவரத்தின் இடைநடுவில் கொள்ளைச் சம்பவங்கள் சிலவும் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த கலவரத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து தரப்பினரையும் அமைதி காக்குமாறு மாநில முதமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.