சென்னை அண்ணா சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்து, கார்கள் கவிழ்ந்தன!!

1223

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் ஒரு காரும், பேருந்தும் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து பள்ளத்தில் விழுந்த போது, அதில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் பள்ளம் விழுந்த பகுதியில் போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.
மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

காவல் துறை இணை ஆணையர் தலைமையில் விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெலும் விபத்தில் சிக்கிய மாநகராட்சி பேருந்து ஓட்டுநர் கூறுகையில்,’நின்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டதால், பயணிகள் உடனடியாக இறக்கி விடபட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது’ என கூறினார்.