வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவு : மார்ச்சில் மாத்திரம் 11,547 பேர்!!

624

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,486 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் 11,547 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி மாதம் 10,464 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8,475 பேரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.