இரு மகள்களை கிணற்றுக்குள் வீசிக் கொன்று : தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்!!

488

6அநு­ரா­த­புரம் விஹார கல்­லஞ்­சிய 50 வீட்­டுத்­திட்ட குடி­யி­ருப்பு பகு­தியைச் சேர்ந்த 30 வய­தான பெண் ஒருவர் தனது மகள்மார் இரு­வரை வீட்­டுக்­கி­ணற்றில் வீசி கொலை செய்­து­விட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இச் ­சம்­பவம் கடந்த 7 ஆம் திகதி இரவு இடம்­பெற்­றுள்­ளது. சம்­பவம் இடம்­பெற்றபோது நுவ­ரெ­லியா பிர­தே­சத்­தி­லுள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் கட­மை­யாற்­றி­வரும் உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர் வீட்டில் இருந்­தி­ருக்­க­வில்லை எனவும், அவ் ­வே­ளையில் வீட்­டி­லி­ருந்த குறித்த பெண்ணின் மூத்த மக­னான 7 வயது சிறு­வ­னுக்கு எவ்­வித பாதிப்­பு­களும் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்கள் நதீகா மது­ரங்கி குண­சே­கர (30), புவனீ நுவன்­ஞனி ( 4) மற்றும் ஒன்­றரை வய­தான பிகுன்யா செவ்­வந்தி ஆகிய மூவ­ரு­மாவர்.

பிள்­ளைகள் மூவரும் நித்­தி­ரைக்கு சென்­றதன் பின்னர் இப் பெண் கடி­த­மொன்றை எழுதி, அக்­ க­டி­தத்தை குடும்பப் படங்கள் அடங்­கிய புகைப்­பட அல்­ப­மொன்­றினுள் வைத்து அதனை சமை­ய­ல­றையை அடுத்து இருந்த அறை­யி­லி­ருந்த மேசை மீது வைத்­து­விட்டு, மகள்மார் இரு­வ­ரையும் கிணற்றில் வீசி­விட்டு வீட்டு சமை­ய­ல­றை­யினுள் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

ஏழு வய­தான மகன் மறுநாள் சனிக்­கி­ழமை காலை 7 மணி­ய­ளவில் நித்­திரை விட்­டெ­ழும்பி சமை­ய­ல­றைக்கு சென்று பார்த்­த­போது. தனது தாய் தூக்கில் தொங்­கு­வ­தனை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்து இவ் ­வி­ட­யத்தை அய­ல­வர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­த­னை­ய­டுத்து அவர்கள் இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

தனது பிள்­ளைகள் இரு­வரும் நித்­தி­ரையில் இருக்­கும்­போதே கிணற்றில் போடப்ப ட்டிருக்­கலாம் எனவும் தனது மகன் சற்று பெரி­யவன் என்­ப­தனால் அவன் விழித்துக் கொள்­ளக்­கூடும் என்ற எண்­ணத்தில் அப் பெண் அவனை விட்­டு­வைத்­தி­ருக்­கலாம் என்றும் பொலி ஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

சம்­பவ இடத்தில் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மைய, குறித்த பெண் தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு முன்னர் எழு­தி­யி­ருந்த கடி­தத்தை பொலி ஸார் மீட்­ட­துடன் உயி­ரி­ழந்த பெண்­ணினால் அவ­ரது மரணம் குறித்து உற­வி­னர்­க­ளுக்கு அறி­விப்­ப­தற்கு இல­கு­வாக இருப்­ப­தற்­காக அவ­ரது நெருங்­கிய உற­வி­னர்கள் இரு­வரின் தொலை­பேசி இலக்­கங்கள் எழு­தப்­பட்­ட­வாறு சமை­ய­லறை கதவில் ஒட்­டப்­பட்­டி­ருந்த காகி­த­மொன்­றி­னையும் மீட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, அநு­ரா­த­புரம் பதில் நீதிவான் நதீ ஆகாஷ் குரே முன்­னி­லையில், உயி­ரி­ழந்த சிறு­மிகள் இரு­வ­ரி­னது சட­லங்­களும் மீட்­கப்­பட்டு நீதிவான் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இம் மூன்று சட­லங்­க­ளையும் அநு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய பிரி­வுக்கு மரண விசா­ர­ணை­க­ளுக்கு அனுப்பி வைக்­கு­மாறும் அப்­ப­ரி­சோ­தனை அறிக்­கை­களை நீதி­ மன்­றுக்குச் சமர்ப்­பித்­ததன் பின்னர் சட­லங்­களை உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நெருக்­க­மான உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கு­மாறும் நீதிவான், பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இந்­நி­லையில், சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.