கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு நேற்று பிற்பகல் சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 10 பேரின் சடலங்கள் கண்டெுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 04 சிறுவர்களும் 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதேவேளை காயமடைந்த 07 பேர் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் பாதிக்கப்பட்வர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விஷேட வேலைத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.






