இலங்கை பயணி சென்னை விமானநிலையத்தில் திடீர் மரணம்!!

244

சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த 26 வயதான இலங்கை பயணி இளவன் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சென்னை விமான நிலையத்தில் இன்று (16.04.2017) ஒரு நாள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தலாம் என்ற உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பன்னாட்டு முனையத்தில் இன்று ஒரு நாள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.