மனைவி, மகனின் சடலங்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் மகளை காணவில்லை : தந்தையின் கதறல்!!

230

 
மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சிலர் தங்களின் உறவுகளை அடையாளம் கண்டுள்ள போதிலும் சிலர் தங்கள் உறவுகளை தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், தனது உறவுகளை இழந்த கணவர் ஒருவரின் கதறல் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனர்த்தத்தில் பலியான மனைவி மற்றும் மகனின் சடலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது இளைய மகளை இது வரையில் கண்டுப்பிடிக்கவில்லை என மகளின் தந்தை கதறலுடன் தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியை சேர்ந்த சிவகுமாரன் என்ற நபரே இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

பிரனீதா என்ற தன் இளவயது மகளே காணாமல் போயுள்ளார்.அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட மீட்கும் நடவடிக்கைகளில் 28 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அவர்களுள் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.