இலங்கையில் 137 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் : நாசா அறிவிப்பு!!

515

தற்போது இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் காணப்படுகின்றது.

6 ஆயிரத்து 300 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. ‌

அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.