மீண்டும் இணையும் அதிமுக : இரவோடு இரவாக மெரீனா கடற்கரையில் ஸ்டாலின்!!

567

தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

இணைந்து செயல்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்தை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மெரீனா கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.