விமானத்தில் இதை செய்தால் பயணிகளுக்கு 15 லட்சம் அபராதம்!!

1030

இந்தியாவில் விமானங்கள் புறப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுத்தும் பயணிகளுக்கு 15 லட்சம் வரை அபராதம் விதிக்க ஏர் இந்தியா விமானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் தான் இந்த அதிரடி விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக விமானங்களில் சரியான நேரத்தில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

அதாவது, விமானம் புறப்பட வேண்டிய நேரமானது சில பயணிகளால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக விமானப்பயணத்தை ஒரு மணி நேரம் தாமதிக்க வைக்கும் பயணிக்கு 5 லட்சம் அபாரதம் விதிக்கப்பட இருக்கிறது.

மேலும். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதம் ஏற்படுத்தினால் 10 லட்சம் அபராதமும், 2 மணிக்கு மேல் தாமதப்படுத்தினால் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாட்டை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவலகள் எதுவும் வெளியாகவில்லை.