இலங்கை வீரர் ரங்கன ஹேரத் செய்யவுள்ள வரலாற்று சாதனை!!

520

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் (39) கடந்த 1999ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

விரைவில் 90களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அதிக காலம் விளையாடும் வீரர் என்ற பெருமையை ரங்கன பெறவுள்ளார். இதுகுறித்து ரங்கன கூறுகையில்,

பந்துவீச்சாளர்களை விட அதிக காலம் விளையாட பேட்ஸ்மேன்களுக்கு சுலபம் தான். ஏனென்றால் பந்து வீச்சாளர்களுக்கு தான் அதிகமாக காயம் ஏற்படும். நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

400 விக்கெட்களை வீழ்த்துவதும், வரவிருக்கும் இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கெதிரான போட்டிகளில் வெற்றி பெறுவதுமே எனது இலக்காகும் என கூறியுள்ளார்.

இன்னும் 27 விக்கெட்களை கைப்பற்றினால், 400 விக்கெட்களை வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரராக ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.