வவுனியாவில் கனடிய புலம்பெயர் உறவுகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

771

 
கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் நேற்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன.

சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம், புதுக்குளம் மற்றும் ஓமந்தை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு, நாவற்குளம், மகிளங்குளம், கதிரவேலர்பூவரசங்குளம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 10 குடும்பங்களுக்கு குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் நல்லின கறவைப்பசுக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், கொடையாளர் திருமதி சந்திரா வேலாயுதபிள்ளை, புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மற்றும் சுந்தரபுரம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அண்மையில் கனடா சென்றபோது சுகாதார அமைச்சர் அங்குள்ள புலம்பெயர் உறவுகளிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.