டோனியை பார்த்து மிரண்டு ஓடிய விளம்பர நிறுவனம்!!

315

dhoni

பெரிய தொகை கேட்டதால் விளம்பர நிறுவனம் ஒன்று டோனியை விட்டுவிட்டு வேறொரு நபரை ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரபல சூட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க பிராண்ட் அம்பாசிடராக இருக்குமாறு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியை அணுகியுள்ளது.

அவரோ 10 கோடி சம்பளம் கேட்கவே பெரிய தொகை என கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டதாம். இதையடுத்து பொலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அணுகியபோது அவரோ டோனி கேட்டதில் மூன்றில் ஒரு பங்கு தொகையையே அதாவது 3 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சைஃப் அலி கானை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

விளம்பர படங்களின் மூலம் டோனி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.