சச்சின் ஓய்வு பெற்றதற்கு சீனிவாசன் தான் காரணம் : பரபரப்பு குற்றச்சாட்டு!!

305

sachin

சீனிவாசனின் வலியுறுத்தலை அடுத்து தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கியது தொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் ஆதித்யா வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சீனிவாசன் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் தாங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுப்பேற்கக் கூடாது என்றது.

இதையடுத்து ஆதித்யா வர்மா கூறுகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் சொந்த சண்டை அல்ல கடந்த 13 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பீகாருக்கான சண்டை.

சீனிவாசனின் வலியுறுத்தலால் தான் சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது. தெரிவாளர்கள் சச்சினிடம் பேசினார்கள் அதன்பின்பே ஓய்வை அறிவித்தார்.

சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பெயரை கெடுத்துவிட்டதாகவும் தான் நீதிக்காக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.