அரசியல் ஸ்திரமற்ற தன்மையினால், 2016ம் ஆண்டில் 669 பேர் உயிரிழப்பு!!

506

2016ஆம் ஆண்டு எத்தியோபியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையினால் 669 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தியோபியாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையொன்று, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் எத்தியோபியாவின் ஓரோமியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 462 பேர் பொதுமக்கள் எனவும், 33 பாதுகாப்பு பிரிவினரும் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார உரிமை பறிப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமாரா பிராந்தியத்தில் 110 பொதுமக்களும், 30 பாதுகாப்பு பிரிவினரும் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் அந்த நாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.