HALL OF FAME பதவிக்கு முத்தையா முரளிதரன் தெரிவு!!

680

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற HALL OF FAME பதவிக்கு இலங்கையில் முதல் தடவையாக முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவி முத்தையா முரளிதரனுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டிற்காக ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுகின்ற உயரிய பதவியாக HALL OF FAME பதவி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.