திருகோணமலையில் 3 வயதுக் குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகம்!!

519

திருகோணமலை – தோப்பூர், அல்லை நகர் பகுதியில் 3 வயது குழந்தையும் 9 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது சகோதரரே பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான சந்தேகநபர் கொழும்பில் பணிபுரிவதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.