இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவிற்கு அருகே, குறுகிய பாதையில் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்குள்ளான பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இமாலய மலைப்பகுதிகளில் அபாயகரமான, குறுகிய சாலைகளில் இது போன்ற விபத்துகள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






