இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!!

377

 
மயிலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர்மைலம்பாவெளி, விபுலாநந்தபுரத்தில் “யோகதிராவிடகுமார் யோகேட்குமார்(20) என்ற இளைஞரே தனது வீட்டு வளையில் சீலையொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று முந்தினம் காலை குறித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

சம்பவ இடத்துக்கு ஏறாவூர் பொலிஸாருடன் ஏறாவூர் மரண விசாரணை அதிகாரி சகிதம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச தமிழ் கிராமங்களில் இதுவரை 20வது தற்கொலைச் சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குறிப்பாக இந்த வருட தொடக்கத்திலிருந்து தற்போது வரையான காலப்பகுதியில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.