இளம் யுவதி தற்கொலை!!

303

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினை சேர்ந்த இளம் யுவதி கிருமிநாசினியை அருந்தி உயிரிழந்துள்ளார்.

சின்னவத்தை கிராமத்தினைச் சேர்ந்த இராமச்சந்திரன் விதுசியா (வயது-17) எனும் இளம் யுவதியே இவ்வாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

சின்னவத்தையில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத வேளையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் நஞ்சினை குடித்துவிட்டு வீட்டின் அறைக்குள் நித்திரை கொண்டுள்ளார்.

வெளியே சென்ற தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மகள் வாந்தி எடுப்பதை தாயினால் அவதானிக்கப்பட்டது. அயலவர்களின் உதவியுடன் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளம் யுவதி நஞ்சினை அருந்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையிலே சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.