இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

420

Dhoni

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில் டோணிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து சபை விசாரணை நடத்தும்.

சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடக்கையில் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார். டோணி விவகாரம் தொடர்பாக சபை உறுப்பினர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களின் வங்கி கணக்குகள், வருமானம், பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வீரர்கள் தங்களுடைய தொலைபேசி எண்களை கிரிக்கெட் சபையிடம் அளிக்க வேண்டும்.