மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு!!

712

suicide hanging

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

நாவுக்கரசர் வீதி மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த ஜீவரெட்ணம் நிர்மலா(25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் கணவன் அரேபிய நாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.