கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

537

arrest1

கிளிநொச்சி, பாரதிபுரம் பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.