கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர் : பிரான்ஸில் விநோதம்!!

352

பிரான்ஸில் ஓவியர் ஒருவர் கோழி முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொறித்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் சாதனையொன்றையும் படைத்துள்ளார்.

பிரான்ஸைச் சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44), கின்னஸ் சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கு முன்பு இவர் கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 தொன் எடையுள்ள சுண்ணாம்புப் பாறைக்குள்ளும் ஒருவாரம் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்கச் செய்யும் அல்லது இன்குபேட்டர் கருவி மூலம் குஞ்சுகள் பொறிக்கவைக்கப்படுகிறது. ஆனால், இவர் விசே‌டமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி அடைகாக்கத் தொடங்கினார். 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் (19) அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன.
இதன் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார்.

இவர் முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது 37 டிகிரி வெப்பம் கொடுத்துள்ளார்.