இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்!!

431

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட வாகனங்களின் பாவனை தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் பிலியந்தலை பிரதேசத்தில் பயணித்த இவ்வாறான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரியினால் அவ்வாறான அதிகதிறன் கொண்ட வாகன இலக்கமற்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அண்மையில் வெளியான தகவல்களுக்கு அமைய இந்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான மோட்டார் சைக்கிளை பொலிஸார் பரிசோதனை செய்து பறிமுதல் செய்ய அதிக அக்கறை செலுத்துவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பிலியந்தலை பிரதேசத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.