ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அடித்த பல்டி!!

542

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை வழிநடத்தும் தகுதி சின்ன அத்தை சசிகலாவுக்கு இருக்கிறது என்று கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இன்று அதற்கு எதிர்மாறாக பேசியுள்ளார்.

21.12.2016 அன்று பேசிய அவர், எனது அத்தை ஜெயலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்தவர் சின்ன அத்தை சசிகலா. அதிமுக கட்சியை வழிநடத்தும் பொறுப்பினை சின்ன அத்தை சசிகலா ஏற்றுக்கொண்டால் அதனை நான் வரவேற்கிறேன். அவர்கள் நிச்சயம் இதனை திறம்பட செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என முழுக்க முழுக்க சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்நிலையில், 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று (21.04.2017) பேசிய தீபக், சசிகலா குடும்பம் ஒதுங்கிவிட்டது என்பதெல்லாம் கிடையாது. ஒரு பதவியில் இருந்துகொண்டு ஒதுங்கிவிட்டோம் என்று கூறுவதை விட அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எங்கள் சொந்த அத்தையாக இருந்தபோது நாங்களே அனைத்தையும் விட்டுக்கொடுத்தபோது, தினகரனுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் கட்சியில் இருந்து ஒதுங்கிகொள்ள வேண்டியது தானே என கூறியுள்ளார்.