ஒரே நாளில் 11 பேர் பலி : வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தால் பெரும் நெருக்கடி!!

356

வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இதுவரை 11பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா ஜனாதிபதியை பதவி விலகக்கோரி அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு போராட்டம் தீவிரமடைந்ததில், 11பேர் பலியாகினர்.

எண்ணெய் வளம் நிறைந்த நாடு வெனிசுலா. எனினும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவினை அடுத்து அங்கு பணவீக்கம் அதிகரித்தது.

இந்நிலையில், அன்றாடம் வாங்கும் பொருட்களாகிய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்தனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சியினர் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களை தற்போதைய வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.