தமிழகத்தில் காதலன் ஒருவன் நான் என் காதலியை கொலை செய்து விட்டதாக கூறி ரத்தம் தெறித்த உடையோடு பொலிசாரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மதன்ராஜ் (22). இவன், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி வருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற பெண்ணை பள்ளி பருவதிலேயே காதலித்திருக்கிறான்.
தற்போது, அப்பெண் சென்னை உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, மதன் சிறு சிறு வேலைகள் செய்து வந்துள்ளார். இருந்த போதிலும் துர்கா உடனான காதலை தொடர்ந்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் துர்கா கல்லூரி சென்றவுடன் பேஸ்புக், வட்ஸ்அப் என ஆண் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர் மதனிடம் பேச்சு வார்த்தையை மெல்ல மெல்ல குறைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் துர்காவை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் நான் என் காதலியை கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
விசாரணையில் அவன், கல்லூரியில் மற்ற ஆண் நண்பர்களுடன் பேசியதைத் தொடர்ந்து தன்னிடம் அவள் சரிவர பேசவில்லை,இதனால் தனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் அவள் வாரவிடுமுறைக்காக சென்னையிலிருந்து பேருந்தில் ஜெகதாப்பட்டினம் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது நான் அவளை செல்போனில் தொடர்புகொண்டு, மயிலாடுதுறை பேருந்துநியைலத்தில் இறங்கு, 10 நிமிடம் பேசிவிட்டு அடுத்த பஸ்சில் ஏற்றிவிடுகிறேன் என்று ஆசையாய் பேசினேன்.
என் பேச்சை நம்பி மயிலாடுதுறையில் இறங்கிய துர்காவை டூவீலரில் ஏற்றி பூம்புகார் கடற்கரைக்கு அழைத்துச்சென்றேன். என்னத்தவிர வேறு யாரிடமும் பழகக்கூடாது. செல்போனில் செய்தி பகிரக்கூடாது. படித்து முடித்ததும் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு போட்டேன்.
நான் சொல்லும் அனைத்திற்கு அவள் எதிராக பதில் சொன்னாள். இதனால் கோபம் வந்தது. அருகே இருந்த கல்லால் மூன்று தடவை தலைய நசுக்கியே கொன்றேன். அதன் பின் நேராக இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.






