வடமேல், மத்திய மாகாண முதலமைச்சர்களாக தயாசிறி, சரத் ஆகியோர் தெரிவு!!

700

dayasiri-jayasekara

வடமேல் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமேல் மாகாணசபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்டிருந்தார். அதி கூடிய விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரத் ஏக்கநாயக்கவை விடவும், பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்ன பெருமளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

அனுராத ஜயரட்ன ஒரு லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். எனினும், அனுபவம் சேவை மூப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு சரத் ஏக்கநாயக்கவை முதலமைச்சராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் 3ம் திகதி வடமேல் மற்றும் மத்திய மகாண முதலமைச்சர்களும் அமைச்சர்களும், ஏனைய உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.