கைத்தொலைபேசிக்கு பதில் செங்கலை அனுப்பிய பிரபல ஷொப்பிங் நிறுவனம்!!

308

மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் நித்திலா தேவி என்னும் மாணவி கடந்த 19ஆம் திகதி ஸ்நேப் டீல் என்னும் தனியார் ஒன்லைன் ஷொப்பிங் நிறுவனத்தில் செல்போன் ஓர்டர் செய்துள்ளார்.

இதற்காக 12 ஆயிரம் ரூபாயை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நித்திலா செலுத்தியுள்ளார். இதனிடையில், நேற்று நித்திலாவுக்கு ஸ்னாப் டீல் ஒரு பார்சலை அனுப்பியுள்ளது.

அதில் செல்போன் இருக்கும் என ஆசை ஆசையாக திறந்து பார்த்த நித்திலா அதிர்ச்சியடைந்தார். காரணம் அதில் செல்போனுக்கு பதில் செங்கல் இருந்துள்ளது.

இது குறித்து அவர் புகார் செய்துள்ள நிலையில், ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொழிநுட்ப வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.