
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தமிழக பொலிஸார் கைது செய்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
இந்திய கிரிக்கெட் சபையின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு அவர்களை பொலிஸார் விடுவித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களுக்குத் தடை விதிக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.





