குப்பைத் தொட்டியில் கிடந்த லட்சக்கணக்கான இலங்கைப் பணம்!!

570

தமிழகத்தின் சென்னையில் உள்ள குப்பைத் தொட்டியில் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலங்கை பணம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பெசன்ட் நகர் சாஸ்திரிநகர் பொலிஸ் பூத் அருகே உள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஒப்பந்த பணியாளர் உமா என்பவர் வந்துள்ளார்.

அப்போது அவர் குப்பைத் தொட்டியின் உள்ளே இலங்கைப்பணம் இருப்பதை கண்டு, அதை அருகில் உள்ள சாஸ்திரி ‌நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்

அதன் பின் இப்பணம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் எவ்வாறு குப்பை தொட்டிக்கு வந்தது என்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமரா பதிவுகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் குப்பைத் தொட்டியில் இருந்த எடுத்த பணம் சுமார் 11 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.