மாணவிகளை நிர்வாணப்படுத்தி பொலிசார் செய்த செயல்!!

305

வளர்மதி மற்றும் சுவாதி என்னும் இரண்டு மாணவிகள் கடந்த 15 ஆம் திகதி மூன்று மாணவர்களுடன் கோவையில் இருந்து நெடுவாசல் போராட்டத்திற்கு ரெயில் மூலம் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் ரெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் மற்றும் பறை அடித்தும் பயணம் செய்தனர்.

இதனால் இவர்களை பொலிசார் குளித்தலையில் வைத்து 5 மாணவர்களையும் மாவோஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுகிறார்கள் என கூறி கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாணவிகளை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வழக்கறிஞர் ராஜா கூறும்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக மாணவிகள் கூறியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.