வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைப்பு!!

264

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமானது இரண்டு மாதத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(24.04.2017) தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி கேட்டுள்ளனர்.

தங்களது உறவினர்கள் தொடர்பில் பதில் அளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இரண்டு மாதங்களை அடைந்துள்ள போதும் அரசாங்கம் உரிய பதிலைத் தரவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்று கூடி தேங்காய் உடைத்து அழுது புலம்பி “முருகா! நீயாவது எமக்கு நீதியைப் பெற்றுத்தா” என அழுது வேண்டியுள்ளனர்.