சிறப்பாக நடைபெற்ற வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு!!(படங்கள்)

439

வவுனியா தமிழ் மாமன்றத்தினது மூன்றாவது விவாதப் பயிலரங்கு வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் செட்டிகுளம் ம.வி , வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் மு.ம.வி போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் பங்குகொண்டனர்.

கடந்த இரண்டு பயிலரங்குகளினை விட, மூன்றாவது பயிலரங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாணவர்களிற்கான தனி பேச்சு, சுழலும் சொற்போர், ஒரு தலைப்பினை எடுத்து விவாதித்தல் மற்றும் விவாதம் என்பவற்றில் மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

மேலும் மாணவர்களின் குறை, நிறைகள், மற்றும் விவாதத்தில் கவனிக்க வேண்டியவை போன்ற விடயங்கள் பற்றியும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது . மாணவர்கள் அவர்களின் கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தினார்கள்.

திறமைகள் எங்கிருப்பினும், அதனை இனம் கண்டு தமிழ் மாமன்றம் அதற்கான களங்களை அமைத்துத் தரும் என்றும் தமிழ் மாமன்றத்தின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

004 005 008 009 024 031 34 36