ஜெயலலிதாவின் அறை கதவு உடைப்பு : மூன்று பெட்டிகளில் இருந்த பொருள் மாயம்?

373

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் அறை கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் உள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த மூன்று பெட்டிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், காவலாளியை கொலை செய்தவர்கள் அந்த ஆவணங்களை திருடி சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.