வீதியில் படுகாயமடைந்து மயங்கிய குஷ்பு : காப்பாற்றிய புகைப்படக் கலைஞர்!!

521

காஷ்மீரில் கலவரம் நடந்த போது காயம்பட்ட குஷ்பு என்னும் பெண்ணை புகைப்படகலைஞர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளது நெகிழ்வடைய செய்துள்ளது.

Dar Yasin என்னும் நபர் புகைப்பட கலைஞராக இருக்கிறார். முக்கிய நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து அதை மீடியாவில் வெளியிடுவது அவரின் வழக்கம்.

காஷ்மீரில் Dar Yasi தனது பணியில் இருந்த போது சாலையில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கற்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் குஷ்பு ஜன் (18) என்னும் இளம் பெண் படுகாயம் அடைந்துள்ளார். குஷ்புவின் நண்பர்கள் உதவி கேட்டும் அவருக்கு அருகிலிருந்தவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை.

இதனிடையில், அங்கு இருந்த Dar தன் தொழில் செயல்பாட்டின் படி அடிப்பட்டு கிடந்த குஷ்புவை புகைப்படம் எடுக்காமல், மனிதாபிமான அடிப்படையில் அவரை கையில் தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அவரின் செயல் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், Dar கூறுகையில் எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்புவும் எனக்கு மகள் போல தான்.

நாம் ஒருவருக்கு தந்தையாக இருக்கும் போது, ஒருவர் உதவி கிடைக்காமல் இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது என கூறியுள்ளார்.

Dar, குஷ்புவை தூக்கி கொண்டு ஓடும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது